6
காட்டுக் கொடிகளாலான
இந்த கூடையை
கொடுக்க வேண்டியே
நான் வந்தேன்.
திறந்து பார்க்கும் போது
நீ எடுக்க
இரண்டு இனிப்பு துண்டுகள் கூட வைத்தேன்.
திறந்து பார்க்கும் போதும்
நீ
அந்த கூடையை
பார்க்கவில்லை
7
ஒரு கூழாங்கல்
ஆக விரும்பினேன் நான்
மழுங்கியது.
ஆயினும்
கூர் முனை ஏதுமில்லாதது
நாள்தொறும்
ஆற்றில் கிடந்து பார்த்தேன்
என் கூழாங்கல்
அங்கு கிடக்கவில்லை
ஏனில்
மண்ணில்
நான்
உப்பாயிருக்கிறேன்







