4
உன்
நிலத்தை பார்த்துக் கொள்ள
எதிரியை செறுத்து நிறுத்த
இணையை கண்டு சொல்ல
அந்த மரத்திற்கு
நீ
ஓடிப்போய்
ஊற்றி வருவதென்னவோ
ஒரு
சிறு நீர்
5
கோடைகால
இரவின் மழையால்
பனித்த ஒரு காலை
பறவைகளின்
கீச்சொலியை ரசித்தவாறு
ஒன்னுந் தெரியாமல்
என்பிலதனை
தேய்க்க
தன்
வண்டியை எடுக்கிறது
அறம்
6
கட்டி எழுப்பினோம்
நம்மை
ஒட்டி தழுவினோம்
நம்மை
கிட்ட நெருங்கினோம்
நம்மை
எட்டி எய்தினோம்
நம்மை
திட்டி விலக்கினோம்
நம்மை
எட்ட ஏங்கினோம்
நம்மை
மீண்டுங்
கட்ட துவங்கினோம்
நம்மை
நம்மை னோம்
நம்மை







