41
அண்டையர்களிடம்
நீயும்
உன் கூட்டமும்
நெஞ்சு நிமிர்த்தி
இரு றெக்கை விரித்து
தத்தி தாவி
கீச்சலிடுவது
நீயல்லாதவர்க்கு
ஓர் ஜுகல் பந்தி
42
என்னோடு
விரிந்து நின்ற உனக்கு
தர முடிந்ததெல்லாமொரு
முத்தந்தான்
43
தூங்கிவிட்டதென
நடிக்கும் இலையில்
தொட்டால் சிணுங்கி எழுகிறது







