வலு ஒழிந்த கைகளெனக்கு
1

வெறும் அழகை
வைத்து வைத்து
நிறைத்தேன்

உண்ண ஒரு பருக்கை
உனக்கு நான்
கொண்டு தாராத பொழுது




2

தனித்தமர்ந்திருக்கும் உனக்கு
ஏதேனும் தர வேண்டுமோ நான்
வலு ஒழிந்த கைகளெனக்கு

ஒருவேளை
விரும்பி நீ கேட்டால்
ஒரு சீக்கை அடித்து
காண்பிக்க முடியுமோ என்னவோ?