பொங்கி வரும்சுடர் சோதியே
3

பொங்கி வரும்
சுடர் சோதியே
சொல்லொன்று தாராயோ

காலத்திலிருந்து காலத்திற்கு
பொங்கி வரும்
பெம்பொய்கையே

சொல்லிலிருந்து சொல்லுக்கு
சொல்லிலிருந்து சுடருக்கு
வழி சொல்லாயோ

சொல்லோய்ந்து
சுடரோய்ந்து
உயிருயிராவது
எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?