6
வந்த காலம் முதல் கை ஏந்திவிட்டேன்
வைக்க இங்கே உள்ளதென்ன
மண்ணை என் குருதி என வைத்தாய்
குடித்து பொறுத்தேன்
வளி என்வளை அறுக்கும்படி வைத்தாய்
வாழந்து பொறுத்தேன்
வெளி என் தலை சுமக்கும்படி வைத்தாய்
நின்று பொறுத்தேன்
ஊழ் கொண்டு வந்தேன் இம்முறை
பாழ் கொண்டு போவேன் இம்முறை
பசி பொறுக்கேன்
வைத்துக்கொண்டு வைத்திளிக்கும்
நெஞ்சங்குலை பிய்தெடுப்பேன்
ஏனாதி காலம் ஏந்திய கையில்







