செத்து மிதந்தன பாதங்கள்

தேய்த்து தேய்த்து
சாணை தீட்டியதில்
ஒன்று கூர்மையானது
ஒன்று கூழாங்கல்லானது


****

நாம்
வந்த வழியில்
செத்து மிதந்தன பாதங்கள்

செத்த பாதங்கள்
சுமக்க வேண்டியதில்ல
நடக்க வேண்டியதில்லை
பசிக்க வேண்டியதில்லை
சாக வேண்டியதில்லை

செத்த பின்
அவை வேண்டியதில்லை