இவ்வாடை அழுக்கேறியது

இவ்வாடை
அழுக்கேறியது

உலகின் நின்கரம் 
தீண ஒப்பாதது

உன் முன் நிற்கையில்
என் வெட்ட வெளி
இல்லாமலாக்குவது
  
 இவ்வாடை
 நீ அருளியது

நம் இடைவெளி
இல்லாமலாக்குவது

இவ்வாடை
நம்மிருவர் அழுக்கேறியது