35
உடல் அருளப்பட்டோனே
நான் உன்னுடன் இருக்கிறேன்
அவ்வுடல் வற்றிச் சோறும் தொறும்
நான் உன்னருகில் வருகிறேன்
அருளியவன் அவ்வுடலினால் அமைக
நீ அவனுக்கருளியதால் அமைக
அருளப்பட்டோனே
நான் அவ்வுடல்
உன் இனிய கடைத்தேற்றம்
****
சொல் அளாவி நிறுக்கும்
எம் தந்தையே
நான்
அவர்களின் சொல்லாவது
எங்ஙனம்?
குழந்தாய்
நீ அனைவரின் சொல் அல்லவா?
அனைவரில் அவர்களுமுண்டு
அச்சொல்
அவர்களின் விண்ணேற்றம்






