36
உயிரற்றதினால்
எச்சங்களை மூடற்க
அது தெய்வமொன்றின் அருட்கமழ்
உயிரொன்றின் ஊண்துண்டு
நம்மனைவரின் மலம்
விசும்பின் அப்புறமிருந்த
புள்ளலகின் ஊட்டு.
37
விரல் இடுக்கினிடை
அலைத்த இறகினால்
நீ பறவை.
பறவையோ
உன்னிடமிருந்து பறந்து வந்த பறவை
38
நான் சொல் முடையத் துவங்கினேன்
நீ உன் கூட்டை
சாளரத்தை நீ அமைத்தாய்
ஆகாயத்தை நான்
குடியேறாமல்
வீடு மாறிப் பறக்கிறோம்
நாமிருவரும்






