• நோக்கற்றதின் நோக்கு

    கவிதை யாதெனில் என இங்கு உரையாற்றும்படி என்னிடம் கேட்கப்பட்டது. எது கவிதை என்னும் கேள்வியை உள் வைத்து அல்ல, கவிதையை நீ எங்கிருந்து பார்த்தாய் அல்லது பார்க்க விழைகிறாய் என கேட்க நினைத்ததன் விளைவே இது. கவிதையை எந்த சாளரம் வழியாக நான் கண்டேன் எனச் சொல்வதே இங்கு பொறுத்தமானது. காசியில் கங்கை படித்துறையில் கிடக்கும் கூழாங்கற்களை எடுத்து தெய்வமாக பிரதிஷ்டை செய்யும் வழக்கம் பற்றி நித்யா கூறுகிறார். இமய மலையிலிருந்து…

    Continue reading →: நோக்கற்றதின் நோக்கு
  • தண்ணீரில் உரசினால் போதும்

    5 தொலைப்பதற்குஎனக்குஇவ்வுலகமே உள்ளது பாவம் நீதொலைவதற்குஎங்கு போவாய் 6 கொளுத்தும் முன் தப்பிதுடுப்புக் குச்சிகளுடன்தண்ணீரில் மிதந்தது வந்ததுஒரு பெட்டி படகு இம்முறைபடகைச் செலுத்ததுடுப்பைதண்ணீரில் உரசினால் போதும்

    Continue reading →: தண்ணீரில் உரசினால் போதும்
  • சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க

    நண்பர்களே என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. கீழே இணைப்புகள் அளிக்கிறேன். Panuval.com மூலம் வாங்க Commonfolks.in மூலம் வாங்க சென்னை புத்தக திருவிழாவில் வாங்க தன்னறம் நூல்வெளி  —  315 வான்கோ பதிப்பகம்   —-  224 யாவரும் பதிப்பகம்.  —-   42 , 43 சால்ட் பதிப்பகம்.   —–   422 , 423 பனுவல் புத்தக நிலையம்.   —- …

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் வாங்க
  • சுடரே பொருத்தும் சுடர்

    4 முலைத்திரிதேடித் துழாவுஞ் சுடர் திரியோகன்னங் கருஞ்சுடர் சுடரே பொருத்தும் சுடர் **** எனக்காகமிருது மிருதுவெனமிருது சேர்த்த தனம்தன் தலைப்பில் வைத்திருந்ததுஒரு குன்றிமணி

    Continue reading →: சுடரே பொருத்தும் சுடர்
  • மதாருக்கு நன்றி

    சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு அழகிய பின்னட்டை குறிப்பை வழங்கிய சமகால கவிஞரான மதார் அவர்களுக்கு என் நன்றி. மதாரின் குறிப்பு மரபார்ந்த சொல்லாட்சிகள் நவீனக் கவிதைக்குள் வரும்போது கவிதை முறுக்கேறி உரத்து ஒலிப்பதற்கான வாய்ப்புண்டு. மாறாக, வி.சங்கரின் கவிதைகள் அமைதியை அடைகின்றன. மரபின் உருவேற்றம் பெற்று உறைந்திருக்கும் சொற்கள் இவரது கவிதைகளில் உருகியோடும் நீரோட்டமாகின்றன. அதன் சிற்றலைகள் எழுப்பும் ஓசைகள் ஜலதரங்கமாய் மயக்குகின்றன. மதார்

    Continue reading →: மதாருக்கு நன்றி
  • சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு

    கவிஞன் ஒருவனும் அல்லன் ஒரு கவிப்பார்வை முளைத்து மெல்ல மெல்ல வளர்ந்து மரமாகி பூவெடுக்கும் சித்திரம் இந்நூலில் உள்ளது. கனிந்துள்ளதா அம்மரம் என்று காலம் சொல்லும். இல்லையென்றால் பின்னாளில் கனியலாம். ஒருவேளை மரம் என்பதற்கு மரம் போதும் என்ற காலம் கனிந்துவிட்டதா?  அம்மரமோ, வெயில்தேடி தம் கதி மாற்றிய பல்வேறு கிளைகளுடன் உள்ளது. ஆயினும் அதன் அடி ஒன்றே.  ஒவ்வொரு கிளையும் எதிரெதிர் திசையில் எழுந்தாலும் மரமெங்கும் மலர் கமழ் ஒன்றே. எதனொன்றின்…

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் நூலுக்கு என் குறிப்பு
  • என் பேரில்

    வரிசையில்எங்கெங்கோ இருந்த எழுத்துகள்என் பேரில்சேர்நது கொண்டன

    Continue reading →: என் பேரில்
  • அறியாதவள் நீயல்லவா?

    அறியாத ஒன்றுடன்தனித்து விடப்பட்டவள் நீயல்லவா?  ஊர்கமழுமுன் உடல்நிலைநிறுத்த அறியாதவள்நீயல்லவா?  பிறந்தவுன் குட்டிகளின்பெயர் அறியாதவள்நீயல்லவா?  தின்றவுன் குட்டிகளைசெறிக்கத் தெரியாதவள்நீயல்லவா?  அழிந்தவுன் உடலைஅழிப்பதறியாதவள் நீயல்லவா?  வருமுன் பிறப்பைமட்டுநிறுத்த அறியாதவள்நீயல்லவா?  பிறந்த பின்னிங்குதனித்திருக்க அறியாதவள்நீயல்லவா?    

    Continue reading →: அறியாதவள் நீயல்லவா?
  • லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரை – சூது பவளம் கண்டேன் அல்லேன்

    (சிலேட் பதிப்பகம் வழியாக வெளியாகும் என்னுடைய முதல் கவிதை தொகுப்பான சூது பவளம் கண்டேன் அல்லேன் என்ற நூலுக்கு கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன் அளித்த முன்னுரை) சரளம் பூத்த மலர்கள் வழக்கத்துக்கு மாறான ஒரு நிகழ்வு தென்படுகையில் திகில் உண்டாவது இயல்பு. வி. சங்கரின் கவித்துவ வெளிப்பாட்டை இத்தகையதொரு அனுபவம் எனலாம். அது நிச்சயமாக நவீன கவிதைகளின் வடிவில் இல்லை. ஆனால் அது நவீன கவிதைகள் தருகிற கவிதை அனுபவத்தைத்…

    Continue reading →: லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரை – சூது பவளம் கண்டேன் அல்லேன்