• அன்னையேஉன் பாதப்பூவடிக்குள்கூர்முட்கள் வைத்திருக்கிறாயா?உன் பாதங்களில் ஒன்றையே நானறிவேன்அதன் தடங்கள் ஒற்றியேஓர் கனவில்உன் இடம் கண்டுணர்ந்தேன்அங்கேதுயிலும் உன் குட்டிகளை நான் தூக்கி வைக்க ஆகாதா?இத்துணை தூரம் வந்தவன்உன் குட்டிகளைதொட்டு தடவி பார்க்க அறியாதுநிற்குதல் ஆகுமா !

    Continue reading →: பாதப்பூவடி
  • நூலே மலராகும் நுண்மை

    மேடையிலும் அரங்கிலும் அமர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இயல்பிலேயே கூட்டத்தின் மத்தியில் பேசுவது எனக்கு  கூச்சமளிக்கக் கூடியது. ஆனால் பழகியவர்களுடன் பேசுவதில் எனக்கு தடையேதும் நேர்வதில்லை. இங்கு என்னை பற்றிய அறிமுக உரையையும் என் கவிதைகளைப் பற்றிய தன் வாசிப்பையும் பகிர்ந்து கொண்ட சரவணன் இந்த விருது கூடுகையை எனக்கு அன்னியமல்லாததாக ஆக்கியிருக்கிறார்.  இங்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு  கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிகமானந்தா நினைவுக்கு வந்தார்.…

    Continue reading →: நூலே மலராகும் நுண்மை
  • உன் கையின் கவளம்

    49உன் கையின் கவளம்நான் உண்ண நேராததுஉன் அழுகிய ஆடைநான் அணிந்திராததுஎன் கையால் ஆகாத கவளம்நீ உண்ணக் கூடாததுநைந்த நாற்றமெடுத்த என் பார்வைநீ அணிந்திரக் கூடாததுஆயினும்என் சக உயிரோனேநீ என்னை ஏற்றுத்தான் ஆக வேண்டும்நான்உன்னோடிருக்க வந்தவன் அல்லவா?

    Continue reading →: உன் கையின் கவளம்
  • என் கையெடுத்து எழுதியோனே

    47நின் கையில் என் கையெடுத்துஎழுதியோனே! எனக்குத்தான் எத்துணை நிம்மதி.எழுத்தறியாதுஎனை எடுத்தளித்தேன்கொண்டு போன இடத்தில்கொண்டுவந்து சேர்த்தீர்ஏமாற்றி அறியாரே! எமக்குச் சொல்லும்சொல்லைசரியாகத்தான் எழுதினேனா நான் ? 48அலகில் ஐம்பூசூடிச் செல்லுங் குருவியேயார் ஈய்ந்தது அம்மலர்? அன்றிஅலகிலாதன் அலகில்யார் சூட்டியதுஅலகுடை நின்மலர்?

    Continue reading →: என் கையெடுத்து எழுதியோனே
  • மயிர் பூத்த மலைக்காடு

    45வெறுந்தரையில்படுத்துறங்கும் என்னைப் பார்த்துஎறும்புக் குட்டிகள் நினைக்கும்’ஆ மயிர்பூத்த மலைக்காடுஎத்துணை நெடியது’தெள்ளியதோர் அக ஆழத்தினின்றுஅவர்களுக்கென எழுந்ததுஅன்றைய சூர்யோதயம்46வீட்டு முகப்பில்கவிழ்ந்து தொங்க கற்றாழைதன் தண்டின் மலர்மொக்குவிண் கவிழ்ந்து தொங்கதான் கவிழ்ந்துதன் கொண்டெழுந்ததுநாள் கனிந்த ஒரு நன்நாளன்று

    Continue reading →: மயிர் பூத்த மலைக்காடு
  • உறுதுணை

    42தனக்கேயான பாத்திரத்தில்தன்னைத் தயாரித்துக் கொள்ளும்தேநீருக்கு துணை நின்றேன்பாத்திரம்பொங்கி வழியும் முன்பேநிறுத்தத்தான் வேண்டுமா நான் ?43உறுதுணைஎன்பதுதான் என்ன? உன்னோடு உண்டுஉன்னோடு நீராடிஉன்னோடு களித்துஉன்னோடு உயிர்த்துஉன்னோடு துயில்வதல்லவா? அன்றிஅவரோடு இருந்தநீதானா? 44மரக்கம்பத்தின் மேலோய்ந்துதன்னிரு சிறகு உலர்த்தும் இப்பறவைவிண்ணேகும் வரைநாம் உடனிருந்து கண்டோம்ஆகாயத்து வான்கம்பம் சுமந்துதிரியும் அப்பறவையைவிண்ணகம் காயும் வேளைநாம் எங்கிருந்தோம்?

    Continue reading →: உறுதுணை
  • சிமிழ்கணம்

    41சிமிழ்கணம்ஒளி பூத்த விதையெலாம்ஓடித் திரித்து விளைவிப்பனவானில் கனிந்து தொங்கும் வான்

    Continue reading →: சிமிழ்கணம்
  • கல் குதிரை இதழில் என் கவிதைகள்

    குல் குதிரை 43 ஆம் இதழில் (பனிக்கால இதழ்) என் 6 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. வரையப்பட்ட என் படம் தெற்கத்திகாரனின் ஓர் ஆவேசத்துடன் இருப்பதாக பட்டது. இருக்கலாம். இதழ் அரசு நூலகங்களிலும் சில புத்தக கடைகளிலும் கிடைக்கிறது. பனுவலில் வாங்க முடியும். நன்றி.

    Continue reading →: கல் குதிரை இதழில் என் கவிதைகள்
  • வன்னஞ் சிலம்பின

    39தன் பசும்பொங்கு பொசித்தஎனக்குநிழல்விரித்து நின்றிருந்தது ஆகாயம் பறக்காத அக்குருவி40மண்ணில் நான் நின்றவிடத்தினிருந்துவானோக்கிவன்னஞ் சிலம்பின சிறுநதிக் கூட்டம்

    Continue reading →: வன்னஞ் சிலம்பின