அஃதோர் வீடு





அஃதோர் வீடென்று 
அதனிடம் சொல்லாமலே
காலையில்
நீயதை விட்டுச் சென்றிருக்கிறாய்

நிழல் வேய
பகல் பொழுதில்
நான் அந்த நாணல் சம்புகளை அறுக்கையில்
என்னிடம்
என்ன சொல்ல வேண்டுமென்றே
அதற்கு தெரியவில்லை