எழுந்திடுக மகவே
இரவின் ஈரப் பட்டாகையில்
வர்ணவேடிக்கை ஓய்ந்தது 

தோல் பூத்த களிற்றின்
பிளிறலோசை மங்கியது 

உறங்கும் உலகின் மேல்
பாலை விடிந்தது 

எழுந்திடுக மகவே