-
Continue reading →: எங்கு வைப்பது நம் கண்ணீரை?1. காட்டில்அறத்தோன் இல்லைதனித்த ஒரு மீன் கொத்தியின்பாடல் மட்டுமே உள்ளது2.வானேறவோ வழிந்தோடவோநிரம்பித் தவிக்கிறதுநிறைவிளக்குசுடர் எரியும் திசைஎன ஏதுமுண்டா3.காற்றெனஇவ்வுலகனைத்தையும்முத்தமிடுவேன் நான்.இவ்வுலகு என்னையும்.4.என்னிடமுள்ளதுநம் கண்ணீர்எந்த விளக்கு மாடத்தில்ஏற்றி வைத்தால்நமக்கு அது எட்டும்?
-
Continue reading →: கவிதைகளுக்கு செல்லுமுன் சில சொற்கள்இங்கு நான் வெளியிடும் கவிதைகள் அனைத்தும் தலைப்புகள் அற்றவை. பெரும்பாலும் தலைப்பிடுவது கவிமனம் அல்ல. கவிதையை எழுதியவனின் போதமனம் வாசித்து அளிப்பதே தலைப்பு என்பது என் அனுபவம். தலைப்பென்பது கவிதையின் வாசிப்பை அதை எழுதியவனே ஒரு இடத்தில் ஆனி அடித்து வைப்பதுதான். வாசகனின் விருந்தெலையில் அளையும் வேறொருவனின் விரல். கவிமனம் விளம்புவதன்றி வேறறியாது. அந்த கவிமனம் எழுதிய வரிசையிலேயே இவை பிரசுரிக்கப்படுகின்றன. அம்மனதின் தனித்த பயணத்தை கண்டடைதல்களை வாசகன் தானும்…
-
Continue reading →: சிறிதும் பெரிதுமான ஒரு தொடக்கம்நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் திடீரென 50 நாட்களுக்குள் ஒரு 190 கவிதைகளை எழுதி முடித்தேன். உடனே மீண்டும் 10 நாட்களுக்குள் ஒரு சிறு காவியம் போன்ற ஒரு நூல். அது முடிந்ததும் 20 நாட்களுக்குள் ஒரு அந்தாதி நூல். இது மற்றவர்களுக்கு வாசிக்க கிடைக்க வேண்டும் என்பதாலும் எனக்கு தொடர்ச்சியாக எழுத உந்துதல் அமைய வேண்டும் என்பதாலும் நான் இந்த தளத்தை ஒரு மின்னிதழாக ஆரம்பிக்கிறேன். தொடந்து என் எழுத்துகளை…
-
Continue reading →: குரு வணக்கம்
நாம் இங்கு அழியாது நிற்கும் எந்தவொரு செயலையும் தொடங்கும் முன்பு நம் ஆசிரியர்களை வணங்குகிறோம். அவர்களிடம் நாம் கற்றவையே அந்தச் செயலாய் நம்முன் விரிந்து ஒளிர்வதைக் காண்கிறோம். இந்த வலைப்பதிவை ஆரம்பிக்கும் இத்தருணத்தில் என் ஆசிரியரை நினைத்துக் கொள்கிறேன். எங்கும் இறங்காமல் வானில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்பவன் கீழே தூய்மையான கண்டடைதல்களை கோர்த்தபடி உள்ளது ஒரு பெரும்வெளி. அங்கு நான் கண்டடைய நேர்ந்த முதல் வழிகாட்டி கல் ஜெயமோகன். பயணம்…



