55
உன் இடை வனைதியோ
உன் குழல் திருப்புதியோ நங்காய்
உன் கைகள் புனைதியோ
உன் புவனம் முழுதியோ நங்காய்
எரிமேல் வந்து மருட்டுதியோ
உரிமேல் வந்து உருட்டுதியோ நங்காய்
ஊஞ்சலாடும் உன் பாதம்
ஊறு உற்றால் நோகுதியோ நங்காய்
பேஞ்சலாடும் என் பிரேமை
பெய்யென பெயக்கண்டு சாகுதியோ நங்காய்
கண்ட நாள் முதல்
பேந்த பேந்த விளிக்குதியோ
ஊந்த ஊந்த விலக்குதியோ நங்காய்
நுனி மென்ற நாவினன்
சொல்ல ஒரு சொல்லுண்டு
நங்காய்
(புகைப்படம் : அருண்மொழி)





