49
உன் கையின் கவளம்
நான் உண்ண நேராதது
உன் அழுகிய ஆடை
நான் அணிந்திராதது
என் கையால் ஆகாத கவளம்
நீ உண்ணக் கூடாதது
நைந்த நாற்றமெடுத்த என் பார்வை
நீ அணிந்திரக் கூடாதது
ஆயினும்
என் சக உயிரோனே
நீ என்னை ஏற்றுத்தான் ஆக வேண்டும்
நான்
உன்னோடிருக்க வந்தவன் அல்லவா?






