47
நின் கையில் என் கையெடுத்து
எழுதியோனே!
எனக்குத்தான் எத்துணை நிம்மதி.
எழுத்தறியாது
எனை எடுத்தளித்தேன்
கொண்டு போன
இடத்தில்
கொண்டுவந்து சேர்த்தீர்
ஏமாற்றி அறியாரே!
எமக்குச் சொல்லும்
சொல்லை
சரியாகத்தான் எழுதினேனா நான் ?
48
அலகில் ஐம்பூ
சூடிச் செல்லுங் குருவியே
யார் ஈய்ந்தது அம்மலர்?
அன்றி
அலகிலாதன் அலகில்
யார் சூட்டியது
அலகுடை நின்மலர்?






