அஞ்சுஞ் சுடர்
அஞ்சுஞ் சுடர் எரியுதடி 
சின்னஞ் சிறு எனக்கு
மிஞ்சுஞ் சிரிப்பு மீறுதடி
கள்ளங் கனி உனக்கு

துஞ்சுஞ் சுரம் தெரியுதடி
நெஞ்ச முழு தெனக்கு
மஞ்சனப் பொழில் ஆவுதடி
பிஞ்சு மலர் உனக்கு

விஞ்சுஞ் சரம் வீசுதடி
வைரத்தடி வில் எனக்கு
வஞ்சஞ் சீறி வருகுதடி
நஞ்சரவ விரல் உனக்கு

எஞ்சும் உயிர் ஊறுதடி
எரியுஞ் சீர் எனக்கு
தஞ்சஞ் சேர்க்க மறுகுதடி
தாயின் மார் உனக்கு

அம்மம்மா ஆரமுதே
வாய்த்ததடி உன்னிருப்பு
ஊடிவரும் என்னரசே
வண்ணமடி என்னிருப்பு

போதுமடி உன் களி களிப்பு
காந்துதடி என் துளி துளிப்பு



****"


செல்லப்பேறு நீ எனக்கு
வாலில் ஆடும்
வண்ணக் குழவி நீ எனக்கு
நாவில் தொடும்
நல்ல தணுப்பு நீ எனக்கு
காணா போது
காத்திருப்பு நீ எனக்கு
என்னையே பார்த்திருக்கும்
கண்ணின் மணி நீ எனக்கு

கண்ணம்மா
என்னவெல்லாம் நான் உனக்கு???