45
வெறுந்தரையில்
படுத்துறங்கும் என்னைப் பார்த்து
எறும்புக் குட்டிகள் நினைக்கும்
'ஆ
மயிர்பூத்த மலைக்காடு
எத்துணை நெடியது'
தெள்ளியதோர் அக ஆழத்தினின்று
அவர்களுக்கென எழுந்தது
அன்றைய சூர்யோதயம்
46
வீட்டு முகப்பில்
கவிழ்ந்து தொங்க
கற்றாழை
தன் தண்டின் மலர்மொக்கு
விண் கவிழ்ந்து தொங்க
தான் கவிழ்ந்து
தன் கொண்டெழுந்தது
நாள் கனிந்த ஒரு நன்நாளன்று






