கிறிஸ்து வந்தார்
தான் போன தூரத்திற்கெல்லாம்
கிறிஸ்து
கழுதையில் வந்தார்
கழுதையும்
கழுதையில் வந்தது

ஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்
ஒருநாள்
கிறிஸ்து
கழுதையிடம் வந்தார்

கழுதையின் மேலிருந்து
இறங்கித்தான் வந்தார்